செய்திகள்
அரிசி மூட்டைகளை லாரியில் இருந்து தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் ஏற்றியபோது எடுத்தபடம்.

பொதுவினியோக திட்டத்திற்காக 2,500 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைப்பு

Published On 2021-08-07 13:01 GMT   |   Update On 2021-08-07 13:01 GMT
திருவாரூரில் இருந்து நாமக்கல்லுக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 2,500 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது.

இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்தில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வெளி மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி திருவாரூரில் இருந்து நாமக்கல்லுக்கு பொதுவினியோக திட்டத்திற்காக சரக்கு ரெயிலில் 2500 டன் அரிசி சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

இதையொட்டி திருவாரூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதைதொடர்ந்து சரக்கு ரெயில் அரிசி மூட்டைகளுடன் நாமக்கல்லுக்கு புறப்பட்டு சென்றது.
Tags:    

Similar News