ஆன்மிகம்
தென்னூர் உக்கிர மாகாளி அம்மன் கோவில் தேர் திருவிழா

தென்னூர் உக்கிர மாகாளி அம்மன் கோவில் தேர் திருவிழா

Published On 2021-04-01 02:38 GMT   |   Update On 2021-04-01 02:38 GMT
திருச்சி தென்னூர் உக்கிர மாகாளி அம்மன் கோவில் வருடாந்திர தேர்திருவிழா இரவு காளி வட்டம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து அம்பாள் தேரில் வீதி உலா வந்தார்.
திருச்சி தென்னூர் உக்கிர மாகாளி அம்மன் கோவில் வருடாந்திர தேர்திருவிழா நேற்று முன்தினம் இரவு காளி வட்டம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று காலை சுத்த பூஜை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அம்பாள் தேரில் வீதி உலா வந்தார்.

தேர் தென்னூர் காவல்கார தெரு, அண்ணாநகர், லட்சுமிபுரம், ராமச்சந்திரா தெரு, மல்லிகைபுரம் உள்பட முக்கிய வீதிகளில் வலம் வந்தது.அப்போது பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.இன்று (வியாழக்கிழமை) தென்னூர் பிடாரி மந்தையில் எல்லை காவல் தெய்வமாகிய சந்தன கருப்பு சாமி குட்டி குடித்தல் நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து மருளாளி அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

தொடர்ந்து அம்பாள் தேரில் முக்கிய வீதிகளில் வலம் வருவார். நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடலும் அம்பாள் வீதி உலாவும் நடைபெறும்.நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை சுவாமி கோவிலுக்கு குடிபுகுதல் நிகழ்ச்சியும், 4-ந் தேதி விடையாற்றி விழாவும் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News