செய்திகள்
ரெயில்

கோவை-சென்னை சதாப்தி ரெயில் 30-ந்தேதியுடன் நிறுத்தம்

Published On 2020-11-19 06:11 GMT   |   Update On 2020-11-19 06:11 GMT
பயணிகளின் வருகை குறைவையொட்டி கோவை-சென்னை, சென்னை- கோவை இடையே இயக்கப்பட்டு வரும் சதாப்தி சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை:

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் மார்ச் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ரெயில்களின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. தளர்வுக்கு பின்னர் ரெயில்கள் இயக்கப்பட்டது.

இதில் கோவையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து கோவைக்கும் என 5 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது.

இதில் கோவையில் இருந்து சென்னை மற்றும் மயிலாடுதுறைக்கு செப்டம்பர் 7-ந்தேதி முதல் சதாப்தி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரெயில் கோவை-சென்னை வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற தினங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாததால் ரெயில் குறைந்த பயணிகளுடனே இயக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து பயணிகளின் வருகை குறைவையொட்டி கோவை-சென்னை, சென்னை- கோவை இடையே இயக்கப்பட்டு வரும் சதாப்தி சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை சென்னை (ரெயில் எண்: 06027), சென்னை கோவை (ரெயில் எண்: 06028) ஆகிய 2 சதாப்தி சிறப்பு ரெயில்களில் பயணிகளின் வருகை குறைவாக உள்ளதால் டிசம்பர் 2-ந்தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன. நவம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே இந்த சிறப்பு ரெயில்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News