செய்திகள்
கைது

திண்டுக்கல் அருகே வாகன தணிக்கையில் சிக்கிய மதுரை ரவுடி கைது

Published On 2021-03-02 08:20 GMT   |   Update On 2021-03-02 08:20 GMT
திண்டுக்கல் அருகே வாகன தணிக்கையில் சிக்கிய மதுரை ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பறக்கும்படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் அருகில் உள்ள ரெட்டியபட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார். காருக்கான ஆவணங்களும் அவரிடம் இல்லை. மேலும் அந்த காரை சத்திரப்பட்டியில் இருந்து திருடி வந்தது தெரிய வந்தது. காரில் வந்தவர் மதுரை விமான நிலையம் அருகில் வசித்து வரும் சீமராஜா (வயது37) என தெரிய வந்தது. இவர் மீது கொலை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த சீமராஜா கடந்த வாரம் வெளியே வந்துள்ளார். தற்போது காரை திருடி வந்தபோது பறக்கும்படையினரிடம் சிக்கிக்கொண்டார்.

இதனையடுத்து அவரை திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் மதுரை போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News