வழிபாடு
நெல்லையப்பர் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா

நெல்லையப்பர் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா

Published On 2021-12-15 07:54 GMT   |   Update On 2021-12-15 07:54 GMT
நெல்லையப்பர் கோவிலில் வருகிற 19-ந் தேதி தாமிர சபையில் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. 20-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு நடராஜர் திருநடன காட்சியும், ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், நடராஜருக்கு தீபாராதனையும் நடந்தது. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில், பஞ்ச மூர்த்திகளுடன் மேளதாளம் முழங்க வீதி உலா நடந்தது.

வருகிற 19-ந் தேதி தாமிர சபையில் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. 20-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு நடராஜர் திருநடன காட்சியும், ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. வருகிற 20-ந் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை பெரிய சபாபதி சன்னதி முன்பு திருவெண்பாவை வழிபாடு நடக்கிறது.
Tags:    

Similar News