செய்திகள்
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 30-ம் தேதி தமிழகம் வருகை

Published On 2021-01-21 19:38 GMT   |   Update On 2021-01-21 19:38 GMT
பா.ஜ.க. தேசிய தலைவரான ஜே.பி.நட்டா வரும் 30-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகை தருகிறார்.
சென்னை:

தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் சார்பில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், பா.ஜ.க. தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா ஜனவரி 30-ம் தேதி தமிழகம் வருகிறார். ஜனவரி 30 மற்றும் 31-ம் தேதி மதுரையில் தங்கும் அவர் 234 தொகுதிகளின் அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அதன்பின், மாநில நிர்வாகிகள் மற்றும் சில  மாநில கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.

முன்னதாக, ஜனவரி 29-ம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் பா.ஜ.க. பொறுப்பாளர்களின் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்கிறார். 

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஜனவரி 23-ம் தேதி தமிழகம் வரவுள்ளார் எனவும், அவர் தமிழகத்தில் 3 நாட்கள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
Tags:    

Similar News