செய்திகள்
ஹைதர் அலி

என்னை விராட் கோலி என அழைக்க வேண்டாம்: பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சொல்கிறார்

Published On 2020-03-24 11:21 GMT   |   Update On 2020-03-24 11:21 GMT
ரசிகர்கள் என்னை விராட் கோலி என அழைப்பதைவிட பாபர் அசாம் என அழைப்பதையே விரும்புகிறேன் என பாகிஸ்தான் இளம் வீரர் ஹைதர் அலி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் ஹைதர் அலி. தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பையில் மிகவும் சிறப்பாக விளையாடினார். அதேபோல் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் சிறப்பாக ஆடினார்.

இவர் அடிக்கும் ஷாட்டுகள் அனைத்தும் முற்றிலும் கிரிக்கெட் ஷாட்டாக உள்ளது. வருங்காலத்தில் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக திகழ்வார்கள் என்று கருதப்படுகிறது. இவரை பாகிஸ்தானின் விராட் கோலி என அழைக்கின்றனர்.

ஆனால், ரசிகர்கள் அவரை பாகிஸ்தானின் விராட் கோலி என்று அழைக்கின்றனர். ஆனால் ரசிகர்கள் என்னை அப்படி அழைப்பதை விரும்பவில்லை. பாபர் அசாம் என்று அழைப்பதையே விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹைதர் அலி கூறுகையில் ‘‘ஒரு பேட்ஸ்மேனால் ஒருபோதும் அவருடைய ரோல் மாடலாக மாற முடியாது. ஆனால், அவர்கள் விளையாடுவதுபோல் சில ஷாட்டுகளை காப்பி அடித்து அதில் முன்னேற்றம் காண முடியும். எனக்கு நானே சிறப்பாக முன்னேற விரும்புகிறேன். ரசிகர்கள் என்னை பாபர் அசாம் என்று அழைக்க வேண்டும். விராட் கோலி என்று அழைக்கக்கூடாது. ஏனென்றால், பாபர் அசாம் அற்புதமான ஷாட்டுகளை அடித்து வருகிறார்.

என்னால் விராட் கோலியாக முடியாது. ஆனால், பயிற்சியின் மூலம் அவரை போன்று ஷாட்டுகளை அடிக்க கத்துக்கொள்ள முடியும். நான் ஹைதர் அலி. ஆகவே, நான் ஹைதர் அலியாக மட்டுமே ஆக முடியும்’’ என்றார்.
Tags:    

Similar News