செய்திகள்
தற்கொலை

நாமக்கல் அருகே முதியவர் தற்கொலை

Published On 2021-01-09 15:02 GMT   |   Update On 2021-01-09 15:02 GMT
நாமக்கல் அருகே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்த முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்:

நாமக்கல் அடுத்த வீசாணம் அருகே உள்ள ராசாகவுண்டனூரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 85). இவர் முழங்கால் வலி, ஒரு கை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதன் காரணமாக சிரமப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்த குருணை மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

தகவல் அறிந்த அவரது குடும்பத்தார் லட்சுமணனை மீட்டு நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News