உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

Published On 2022-01-11 11:20 GMT   |   Update On 2022-01-11 11:20 GMT
சென்னையில் நாளை காலை முதல் மதியம் வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக செம்பரம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
சென்னை:

தமிழ்நாடு  மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

செம்பரம்பாக்கம் பகுதி : நசரத்பேட்டை, அகரமேல் மற்றும் மலையம்பக்கம் ஒரு பகுதி.

டைடல் பார்க்/எஸ்.ஆர்.பி டூல்ஸ் ஒ.எம்.ஆர் பகுதி : எம்.ஜி.ஆர் நகர், புரட்சிதலைவி தெரு 1 முதல் 8 தெரு வரை, ஏவர்சென்டை
உயரழுத்த சர்வீஸ்.

மாதவரம் பகுதி : கே.கே.ஆர் கார்டன், தபால்பெட்டி, புக்குராஜ் நகர், பாரதியார் தெரு, கே.பி கார்டன், டி.வி.கே தெரு, வி.ஆர்.டி நகர், ரோஜ் நகர், காண்மால் நகர், பஜார் தெரு, சத்தியமூர்த்தி தெரு,

போரூர்/எஸ்.ஆர்.எம்.சி பகுதி : காரம்பாக்கம், ஆற்காடு ரோடு, மகாலட்சுமி நகர், திருமுருகன் நகர், ஆபீசர்ஸ் காலனி மற்றும்
மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

செங்குன்றம்/பாடியநல்லூர் பகுதி ; பி.டி மூர்த்தி நகர், பாலமுருகன் நகர், காந்திநகர் பகுதி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News