செய்திகள்
தனியார் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியை தற்கொலை
பொத்தேரியில் தனியார் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
வண்டலூர்:
ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்தவர் இந்து (வயது 27). பல் டாக்டரான இவர் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதியில் தங்கிதனியார் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியையாக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எதற்காக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து சக தோழிகளிடமும், ஆஸ்பத்திரி நிர்வாகத்திடமும் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்தவர் இந்து (வயது 27). பல் டாக்டரான இவர் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதியில் தங்கிதனியார் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியையாக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எதற்காக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து சக தோழிகளிடமும், ஆஸ்பத்திரி நிர்வாகத்திடமும் விசாரித்து வருகின்றனர்.