உள்ளூர் செய்திகள்
வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை

ஊட்டியில் பஸ் பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் - வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை

Published On 2022-01-11 09:53 GMT   |   Update On 2022-01-11 09:53 GMT
ஊட்டி தியாகராஜன் நகரில் வட்டார போக்குவரத்து அலுவலர் அரசு பஸ், மினி பஸ்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்
ஊட்டி:

கொரோனோ, ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பல்வேறு முன் னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கான நோய் தடுப்பு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன்  நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு பஸ்கள், மினி பஸ் களில் ஆய்வை மேற் கொண்ட அவர் டிரைவர், கண்டக்டர்களிடம் முக கவசம் அணிதல், பஸ்சில்  சமூக இடைவெளி  பின்பற்றப் படுகிறதா? என கேட்டறிந்து பார்வையிட்டார். முககவசம் அணியாத பயணிகளிடம் முககவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என கண்டக்டர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். 

 பின்னர் ஆட்டோ டிரைவர்கள்,  சுற்றுலா பயணிகள், சுற்றுலா வாகன ஓட்டிகள் ஆகியோருக்கு முக கவசம் வழங்கினார்.  நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என அறிவு றுத்தினார்.  வழி நெறிமுறை களை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரித்தார்.இந்த ஆய்வின்போது  ஆய்வாளர்  குலோத்துங்கன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 
Tags:    

Similar News