செய்திகள்
தற்கொலை

திருவள்ளூர் அருகே பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2021-05-15 10:52 GMT   |   Update On 2021-05-15 10:52 GMT
திருவள்ளூர் அருகே பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மேல் விளாகம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பவித்ரா (30) என்ற மனைவியும், குணஸ்ரீ (10) என்ற மகனும், பவநிதி (8) என்ற மகளும் உள்ளனர்.

குடிப்பழக்கம் கொண்ட மணிகண்டன், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது, மணிகண்டனுக்கு தீராத வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அவர், தன் வீட்டின் அருகே உள்ள வயல்வெளிக்குச் சென்று அங்கு பூச்சி மருந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்து கிடந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News