செய்திகள்
சுல்தான்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலி
சுல்தான்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:
சுல்தான்பேட்டை அருகே உள்ள வேலப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் ரத்தினசாமி (45). இவர் கோவையில் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 13-ந் தேதி தனது இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டு வீட்டிற்கு திரும்பி வரும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் டைந்த ரத்தினசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் விபத்தில் படுகாயமடைந்த அவரது மனைவி பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.