ஆன்மிகம்
சிதம்பரத்தில் சிவகாமி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

சிதம்பரத்தில் சிவகாமி அம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2020-11-10 03:31 GMT   |   Update On 2020-11-10 03:31 GMT
சிதம்பரத்தில் சிவகாமி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகங்கை குளம் அருகே வடக்கு பகுதியில் சிவகாமி அம்மனுக்கு தனி கோவில் உள்ளது. இங்கு ஐப்பசி பூரம் விழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 1-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினசரி காலை மற்றும் இரவு நேரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று. வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் உற்சவர் சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். தொடர்ந்து கீழவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டு தேரில் அம்மன் எழுந்தருளினார்.

தொடர்ந்து தேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக நிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அம்பாள் கோவிலுக்கு எழுந்தருள செய்யப்பட்டு அங்கு லட்சார்ச்சனை நடந்தது. இன்று (செவ்வாய்க் கிழமை) இரவு பட்டு வாங்கும் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News