செய்திகள்
தற்கொலை

பாரூர் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை

Published On 2021-07-18 17:11 GMT   |   Update On 2021-07-18 17:11 GMT
பாரூர் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

பாரூர் அருகே உள்ள வெற்றிலைக்காரனூரை சேர்ந்தவர் சேட்டு (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த சேட்டு விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சேட்டு இறந்து விட்டார். இதுகுறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News