ஆன்மிகம்
திருவண்ணாமலையில் வழிபாடு செய்த பக்தர்கள்.

திருவண்ணாமலையில் தொடர் தடையால் பவுர்ணமிக்கு முன்னதாக கிரிவலம் செல்லும் பக்தர்கள்

Published On 2021-10-19 08:39 GMT   |   Update On 2021-10-19 08:39 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சோமவார பிரதோ‌ஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வாரத்தில் 3 நாட்கள் தரிசன தடை நீக்கப்பட்ட பின்பு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

இருந்தபோதிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சோமவார பிரதோ‌ஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கிரிவல தடை தெரியவந்ததால் நேற்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் சென்றனர்.

மேலும் இன்று அரசு விடுமுறை தினம் என்பதால் வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் திருவண்ணாமலையில் வசிக்கும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News