செய்திகள்
கேரளாவில் மேலும் 4,531 பேருக்கு கொரோனா
கேரளாவில் மேலும் 4,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலத்தில் மேலும் 4,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,531 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், தற்போது 34,314 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.