உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும்
தமிழகத்தில் ரேஷன் கடைகள் நாளை வழக்கம்போல் செயல்படுவதால் அட்டைதாரர்கள் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
சென்னை:
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
வரும் ஞாயிறு அன்று தமிழகத்தில் ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்.
பொது வினியோக திட்டத்தின் கீழ் ஜனவரி 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் பெறுவதற்காக நியாயவிலை கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலாக பிப்ரவரி 26-ம் தேதி நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் தொடர்ந்து 5-வது நாளாக சரிவு...! இன்று புதிதாக 26,533 பேருக்கு கொரோனா