செய்திகள்
மரணம்

முத்திரையர்பாளையத்தில் டீ வியாபாரி திடீர் மரணம்

Published On 2020-09-13 11:57 GMT   |   Update On 2020-09-13 11:57 GMT
முத்திரையர்பாளையத்தில் குடிப்பழக்கம் உள்ள டீ வியாபாரி வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மூலக்குளம்:

முத்திரையர்பாளையம் காந்தி திருநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 51). இவர் இருசக்கர வாகனத்தில் கேனில் டீ வைத்து விற்பனை செய்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில் முருகேசன் அவரது வீட்டில் திடீரென்று இறந்து கிடந்தார்.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசன் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமாக என விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News