செய்திகள்
கைது

போடியில் 2 1/2 கிலோ கஞ்சா பதுக்கிய கணவன்-மனைவி கைது

Published On 2019-11-28 11:51 GMT   |   Update On 2019-11-28 11:51 GMT
போடியில் 2 1/2 கிலோ கஞ்சா பதுக்கிய கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:

போடி பேச்சியம்மன் கோவில் தெருவில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போடி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமரை கண்ணன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது வீட்டில் கஞ்சா பதுக்கிய முருகேசன் (வயது 65), அவரது  மனைவி சரசு (58) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து 2 1/2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News