செய்திகள்
பணம்

வங்கியில் இருந்து தவறுதலாக அனுப்பப்பட்ட ரூ.5½ லட்சத்தை மோடியின் பரிசாக நினைத்து செலவழித்த நபர்

Published On 2021-09-16 00:24 GMT   |   Update On 2021-09-16 00:24 GMT
வங்கியில் இருந்து தவறுதலாக அனுப்பப்பட்ட ரூ.5½ லட்சத்தை, பிரதமர் மோடி அனுப்பியது எனக்கூறி செலவழித்த நபரால் பீகாரில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
பாட்னா:

பீகாரின் ககாரியா மாவட்டத்துக்கு உட்பட்ட பக்தியார்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். அங்குள்ள கிராம வங்கியில் இவர் கணக்கு வைத்துள்ளார். இந்த கணக்குக்கு சமீபத்தில் திடீரென ரூ.5½ லட்சம் அனுப்பப்பட்டிருந்தது. வங்கி ஊழியர்களின் கவனக்குறைவால் நடந்த இந்த தவறை அதிகாரிகள் கண்டறிந்தனர். எனவே அந்த பணத்தை திரும்ப ஒப்படைக்குமாறு ரஞ்சித் தாசுக்கு வங்கி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

ஆனால் அதற்குள் பணத்தை எடுத்திருந்த ரஞ்சித் தாஸ், அதை செலவழித்துவிட்டார். தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதும், அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. மாறாக, அந்த பணம்
பிரதமர் மோடி
தனக்கு அளித்த பரிசு எனக்கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஞ்சித் தாசை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

வங்கியில் இருந்து தவறுதலாக அனுப்பப்பட்ட ரூ.5½ லட்சத்தை, பிரதமர் மோடி அனுப்பியது எனக்கூறி செலவழித்த நபரால் பீகாரில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News