செய்திகள்
சிவசங்கர் பாபா

சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு

Published On 2021-06-18 08:41 GMT   |   Update On 2021-06-18 08:41 GMT
செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டார்.
செங்கல்பட்டு: 

சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவை கைது செய்த சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை நடத்திய நீதிபதி அம்பிகா, அவரை 15 நாட்கள் அதாவது ஜூலை 1-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.



இந்நிலையில் செங்கல்பட்டு சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


முன்னதாக சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி குழுவினர் ஒரு மணி நேரமாக சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News