செய்திகள்
கைது

திருவையாறு அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது

Published On 2019-12-09 10:18 GMT   |   Update On 2019-12-09 10:18 GMT
திருவையாறு அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவையாறு:

திருவையாறு அருகே ஆவிக்கரையை சேர்ந்தவர் பாரதி(வயது42). இவர் மதுபாட்டில்களை மொத்தமாக டாஸ்மாக்கில் வாங்கி பதுக்கிவைத்து நடுக்கடை மெயின்ரோடு அருகே வாழை கொல்லையில் கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்தார். இரவு அப்பகுதியாக ரோந்து பணிமேற்கொண்ட திருவையாறு சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக் மற்றும் அபர்ணா ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்ற பாரதியை கைது செய்தனர்.

அதேபோல் காவிரி கரை பொன்னாவரை சாலையில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து கொண்டிருந்த தஞ்சை புன்னை நல்லூரை சேர்ந்த திருஞானம் மகன் சரவணன்(38) என்பவரையும் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News