செய்திகள்
கோப்புபடம்

அடிப்படை வசதிகள் கேட்டு திருப்பூர் 3-வது வார்டு பொதுமக்கள் மனு

Published On 2021-10-22 07:05 GMT   |   Update On 2021-10-22 07:05 GMT
மழை காலங்களில் சாக்கடை நீர் மழைநீருடன் கலந்து குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது.
திருப்பூர்:

அடிப்படை வசதிகள் கேட்டு திருப்பூர் மாநகராட்சி 3-வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் மண்டல அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அதில், கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீரின்றி அவதிக்கு உள்ளாகி வருகிறோம். மழை காலங்களில் சாக்கடை நீர் மழைநீருடன் கலந்து குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது.

இதனால் துர்நாற்றம் வீசுகிறது.நோய் தொற்று ஏற்படுகிறது. தெரு விளக்கு, சாக்கடை கால்வாய் வசதியும் இல்லை. எனவே, அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News