செய்திகள்
முதல்வர் பழனிசாமி

பொய் பேசியே ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு இந்தமுறை அது எடுபடாது – முதல்வர் பழனிசாமி

Published On 2021-02-21 14:29 GMT   |   Update On 2021-02-21 14:29 GMT
தமிழகத்தில் பொய் பேசியே ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு இந்தமுறை அது எடுபடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
கரூர்:

கரூரில் அதிமுக சார்பில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற தேர்தல் பரப்புரையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொய் பேசியே ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு இந்தமுறை அது எடுபடாது. மக்களவை தேர்தலின்போது எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் வாங்கிய மனு என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுக மீது எவ்வளவு குற்றசாட்டு கூறினாலும் அதை பொய் என நிரூபிப்போம். திமுக ஆட்சியில் 220 டெண்டர்கள் ஒருவருக்கே கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். 

நான் முதல்வர் என்று எப்போதும் நினைத்து பார்த்ததில்லை, மக்கள் தான் முதல்வர் என்றும் அதிமுக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News