செய்திகள்
தற்கொலை

பல்லடத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2020-10-22 12:48 GMT   |   Update On 2020-10-22 12:48 GMT
தொண்டையில் ஏற்பட்ட கட்டி குணமாகாததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம்:

பல்லடம் கொசவம்பாளையம் ரோடு காலனி பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 75). இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார், இதனால் இவரது மகன் முருகன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பல்லடம் உழவர் சந்தையில் பகுதிநேர துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவருக்கு தொண்டையில் நோய் ஏற்பட்டு கட்டி உருவானது. நாளுக்கு நாள் வீக்கம் அதிகமாகவே பல இடங்களில் சிகிச்சை பெற்றும், நோய் குணமாகவில்லை. இதனால் வருத்தத்தில் இருந்த ராமன், நேற்று காலை அவரது அறையில், ஓய்வெடுக்க சென்றார். மதிய உணவிற்கு அப்பா வரவில்லை என முருகன் சென்று பார்த்தபோது, சாணிப்பவுடர் (விஷம்) குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தார். 
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதையடுத்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News