ஆன்மிகம்
காளியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை: திரளான பெண்கள் வழிபாடு
மன்னார்குடி வானகாரதெருவில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர்.
மன்னார்குடி வானகாரதெருவில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி திருவிழா கடந்த 14-ந் தேதி சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் தொடங்கியது.
விழாவையொட்டி கரகவீதி உலா நடைபெற்றது. நேற்றுமுன்தினம் இரவு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர்.
விழாவையொட்டி கரகவீதி உலா நடைபெற்றது. நேற்றுமுன்தினம் இரவு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர்.