செய்திகள்
திமுக

காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது

Published On 2021-10-23 11:58 GMT   |   Update On 2021-10-23 11:58 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று 22-ந் தேதி நடைபெற்றது. இதில் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 2 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும், 2 மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.

இதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு 1 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி கிடைத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் லத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கும், துணைத் தலைவர் தேர்தல் பதவிக்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த படப்பை மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த நித்யா போட்டியின்றி வெற்றி பெற்றார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த டி.செம்பருத்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஏ.காயத்ரி போட்டியின்றி வெற்றி பெற்றார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த மலர்கொடி வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த திவ்ய பிரியா வெற்றி பெற்றார்.

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஹேமலதா வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த வசந்தி வெற்றி பெற்றார்.

ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கருணாநிதி வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த மாலதி வெற்றி பெற்றார்.

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சரஸ்வதி வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த உமாமகேஸ்வரி வெற்றி பெற்றார்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கே.கண்ணன் வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கே.விஜயலட்சுமி வெற்றி பெற்றார்.

சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த வி.ஏழுமலை வெற்றி பெற்றார்.

காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த உதயா வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த வி.எஸ்.ஆராமுதன் வெற்றி பெற்றார்.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த கே.கீதா வெற்றி பெற்றார். துணைத் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ஏ.குமரவேல் வெற்றி பெற்றார்.

பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த எஸ்.சங்கீதா வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த பி.பிரசாத் வெற்றி பெற்றார்.

திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க. வை சேர்ந்த ஆர்.டி.அரசு வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஏ.பச்சையப்பன் வெற்றி பெற்றார்.

திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த எல்.இதயவர்மன் வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த எஸ்.சத்யா வெற்றி பெற்றார்.

Tags:    

Similar News