உள்ளூர் செய்திகள்
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு-சேலம், நாமக்கல்லில் நாளை மொழி பாட தேர்வு
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: சேலம், நாமக்கல்லில் நாளை மொழி பாட தேர்வு நடக்கிறது.
சேலம்:
இந்திய அரசு கல்வித்துறையின் கீழ் செயல்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) அனுமதி பெற்று சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு பகுதி-2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை கணிதம் பாடம் தேர்வு நடைபெற்றது.
நாளை (6-ந்தேதி) காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை சிந்தி, மலையாளம், ஒடிசா, அசாமி, கன்னடம் உள்ளிட்டமொழிப்பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.