உள்ளூர் செய்திகள்
ஆலங்குளத்தில் இளம்பெண் மயங்கி விழுந்து சாவு
ஆலங்குளம் அண்ணா நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
ஆலங்குளம் அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் கீர்த்திகா(வயது 18). இவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த கீர்த்திகா திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம் அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் கீர்த்திகா(வயது 18). இவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த கீர்த்திகா திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.