செய்திகள்
குழந்தை இல்லாததால் விரக்தி- இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை லிங்காபுரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் குழந்தை இல்லாத விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காரமடை:
மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை லிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். மில் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (வயது 29). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை.
இதனால் பிரியா மனவேதனையுடன் இருந்து வந்தார். அவரது குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி வந்தனர். தனது கணவரிடமும் அடிக்கடி குழந்தை இல்லாததை கூறி வேதனை அடைந்து வந்தார். அவரும் ஆறுதல் கூறினார்.
மேலும் பிரியா கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் பிரியா தனக்கு குழந்தை இல்லாததை நினைத்தும், உடல்நிலை சரி இல்லாததை நினைத்தும் விரக்தி அடைந்தார்.
சம்பவத்தன்று பிரியா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த சாணி பவுடரை குடித்து மயங்கி விழுந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை லிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். மில் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (வயது 29). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை.
இதனால் பிரியா மனவேதனையுடன் இருந்து வந்தார். அவரது குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி வந்தனர். தனது கணவரிடமும் அடிக்கடி குழந்தை இல்லாததை கூறி வேதனை அடைந்து வந்தார். அவரும் ஆறுதல் கூறினார்.
மேலும் பிரியா கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் பிரியா தனக்கு குழந்தை இல்லாததை நினைத்தும், உடல்நிலை சரி இல்லாததை நினைத்தும் விரக்தி அடைந்தார்.
சம்பவத்தன்று பிரியா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த சாணி பவுடரை குடித்து மயங்கி விழுந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.