செய்திகள்
சேறும் சகதியுமான சாலையில் வாழைக்கன்று நட்டு போராட்டம்
தஞ்சை அருகே உக்கடை கிராமத்தில் சேறும் சகதியுமான சாலையை சீரமைக்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை:
தஞ்சை அருகே உள்ள உக்கடை கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக சாலை காணப்படுகிறது. இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. தற்போது பெய்து வரும் கனமழையால் இந்த சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சேற்றில் வாழைக்கன்று மற்றும் நாற்று நட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். உடனடியாக சாலையை சீரமைக்காவிட்டால் சாலை மறியல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.
தஞ்சை அருகே உள்ள உக்கடை கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக சாலை காணப்படுகிறது. இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. தற்போது பெய்து வரும் கனமழையால் இந்த சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சேற்றில் வாழைக்கன்று மற்றும் நாற்று நட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். உடனடியாக சாலையை சீரமைக்காவிட்டால் சாலை மறியல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.