செய்திகள்
கருப்பு பூஞ்சை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று

Published On 2021-06-09 03:58 GMT   |   Update On 2021-06-09 03:58 GMT
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களுக்கு கண்களில் ஏதேனும் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு பரவலாக உள்ளது. இதுவரை 6 பேருக்கு இந்த கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களுக்கு கண்களில் ஏதேனும் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதார துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
Tags:    

Similar News