செய்திகள்
பர்கூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
பர்கூர் போலீசார், பூமாலை நகர் பகுதியில் உள்ள கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சஞ்சீவி (வயது 25), வல்லரசு (22), வேலு (35), மணி (24) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.