செய்திகள்
கைது

ராணிப்பேட்டையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2021-10-01 10:02 GMT   |   Update On 2021-10-01 10:02 GMT
ராணிப்பேட்டையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை காரை நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான் பால் (வயது 21). இவர் நேற்று காரை கூட்ரோடு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார், ஜான்பாலை கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News