ஆன்மிகம்
தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் மீது வாழைப்பழங்கள் வீசப்பட்ட காட்சி.

மாப்பிள்ளை வீரன் கோவில் திருவிழா

Published On 2021-04-01 04:02 GMT   |   Update On 2021-04-01 04:02 GMT
வாய்மேடு அருகே தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் மாப்பிள்ளை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நடைபெற்றது. விழாவையொட்டி காப்புகட்டுதல் நடைபெற்றது. நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா நடைபெற்றது. முன்னதாக தகட்டூர் பைரவர் கோவில் இருந்து ராதாகிருஷ்ண சாமியார் 3 கிலோமீட்டர் ஊர்வலமாக வந்து மாப்பிள்ளை வீரான் கோவிலை அடைந்தனர். பின்பு கோவிலில் அம்மன் புறப்பாடு செய்யப்பட்டது.

அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது சாமியார் வாழைப்பழங்களை வீசினார். இந்த வாழைப்பழத்தை பிடித்து சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாழைப்பழத்தை போட்டி போட்டு பிடித்து சாப்பிட்டனர்.

தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் மாவிளக்கு போட்டு, பொங்கல் வைத்து உருவச்சிலைகளை நேர்த்திக்கடனாக

செலுத்தினர். விழாவில் 30-க்கும் மேற்பட்ட மண் குதிரைகளை பக்தர்கள் கோவிலுக்கு எடுத்து வந்து குதிரை விடும் நிகழ்ச்சியும் இரவு தேரோட்டம், வானவேடிக்கையும் நடைபெற்றது.
Tags:    

Similar News