செய்திகள்
கோப்புபடம்

தென்காசி அருகே மரங்களை வெட்டி கடத்த முயற்சி: 3 பேர் கைது

Published On 2021-01-12 12:46 GMT   |   Update On 2021-01-12 12:46 GMT
தென்காசி அருகே மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்த் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி:

தென்காசி-ஆய்க்குடி ரோடு பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இருந்த 7 வேப்ப மரங்களை 3 நபர்கள் வெட்டி, டிராக்டரில் கடத்த முயன்றனர். 

இதனை பார்த்த கல்லூரி ஊழியர்கள், அந்த 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து தென்காசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், அவர்கள் ஆய்க்குடி அருகே கம்பிளி பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 32), கணேசன் (22), அகரக்கட்டு பகுதியைச் சேர்ந்த சுடலை (32) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News