உள்ளூர் செய்திகள்
.

திருச்சியில் வணிகர் மாநாடு-சேலம் மாவட்டத்தி்ல் கடைகள் அடைப்பு

Published On 2022-05-05 08:29 GMT   |   Update On 2022-05-05 08:29 GMT
திருச்சியில் வணிகர் மாநாட்டையொட்டி சேலம் மாவட்டத்தி்ல் கடைகள் அடைக்கப்பட்டன.
சேலம்:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்  பேரமைப்பின் சார்பில்  திருச்சியில் இன்று   39-வது தமிழக வணிகர் விடியல் மாநாடு நடக்கிறது.

இதில்  சேலம் செவ்வாய்ப்பேட்டை, லீபஜார், சின்ன கடை வீதி, ரெயில் நிலையம், கருங்கல்பட்டி, கொண்டலாம்பட்டி, ஜங்சன், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் ஏற்காடு , அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூர், ஆத்தூர், தலைவாசல், வீரகனூர், கெங்கவல்லி, தம்மம்படடி, செந்தாரப்பட்டி, உலிபுரம், ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர்,  வனவாசி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், தாரமங்கலம், இரும்பாலை, எடப்பாடி, கருப்பூர், சங்ககிரி, தேவூர், ஆட்டையாம்பட்டி, மல்லூர், பனமரத்துப்பட்டி உள்பட    மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இருந்து வியாபாரிகள் திருச்சி யில் நடைபெறும் மாநாட்டுக்கு  புறப்பட்டு சென்றனர். 

இதனால் சேலம் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
Tags:    

Similar News