செய்திகள்
விபத்து பலி

செந்துறை அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி

Published On 2021-10-24 10:48 GMT   |   Update On 2021-10-24 10:48 GMT
செந்துறை அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்.எஸ்.மாத்தூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் தினேஷ் மற்றும் ஆறுமுகம். இருவரும் நண்பர்கள். கல்லூரி மாணவர்கள்.

இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் குழுமூரில் இருந்து அங்கனூருக்குசென்றுள்ளனர். அப்போது முருகேசன் என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் மீது எதிர்பாரத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டுசிகிச்கைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். ஆறுமுகத்திற்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News