செய்திகள்
கோப்புபடம்.

காங்கேயத்தில் ஆடு திருடிய வாலிபர்கள் கைது

Published On 2021-10-02 09:15 GMT   |   Update On 2021-10-02 09:15 GMT
இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டுடன் இருவரையும் பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காங்கயம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காங்கேயம்:

காங்கேயம் ஏரிக்காட்டுபுதூரை சேர்ந்தவர் தங்கராஜ் ( வயது 47). இவர் தனக்கு சொந்தமாக உள்ள 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இந்தநிலையில் தனது விவசாய நிலத்தில் தங்கராஜின் மனைவி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் ஒரு ஆட்டை தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டுள்ளார். அருகில் இருந்த உறவினர்கள் அவர்களை துரத்திச்சென்று பிடித்தனர். பின்னர் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டுடன் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கொண்டு வந்து காங்கயம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலத்தை சேர்ந்த வடிவேல் (32), ஈரோட்டை சேர்ந்த அஜீத் (19) என்பது தெரியவந்தது. இதனையடுத்து 2
பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
Tags:    

Similar News