செய்திகள்
உப்புக்கோட்டை அருகே மது விற்ற 2 பேர் கைது
உப்புக்கோட்டை அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உப்புக்கோட்டை:
வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வீரபாண்டி அருகே மது விற்ற தப்புக்குண்டு மெயின் தெருவை சேர்ந்த திருமலைச்சாமி (வயது 65), கூழையனூர் மேற்கு இந்திரா காலனி தெருவை சேர்ந்த கருப்பையா (36) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 93 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.