செய்திகள்
திருச்சியில் வங்கி ஊழியரின் மனைவி மாயம்
திருச்சியில் வங்கி ஊழியரின் மனைவி மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கே.கே.நகர்:
திருச்சி கே.கே.நகர் கவிபாரதி நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 35). இவர் திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர் கே.கே.நகரில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 11 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி இரவு ராஜலட்சுமி திடீரென மாயமானார். இதுபற்றி அவருடைய கணவர் திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.