ஆன்மிகம்
திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி கிரிவலம் ரத்து
பெரும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு அரசு நெறிமுறைகளை கடைபிடிக்கும் விதமாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கமாக உள்ளது. ஆனால் கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி முதல் கோவில் மூடப்பட்டதை தொடர்ந்து கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 5 மாதங்களில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்ததால் பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டு வந்தது.
கோவில் மூடப்பட்டு 164 நாட்களுக்கு பிறகு இன்று(செவ்வாய்க்கிழமை) கோவில் திறக்கப்படும் நாளில் பவுர்ணமி கிரிவலம் இருக்கும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ஊரடங்கு அமலில் இருப்பதால் பெரும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு அரசு நெறிமுறைகளை கடைபிடிக்கும் விதமாக இன்று பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவில் மூடப்பட்டு 164 நாட்களுக்கு பிறகு இன்று(செவ்வாய்க்கிழமை) கோவில் திறக்கப்படும் நாளில் பவுர்ணமி கிரிவலம் இருக்கும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ஊரடங்கு அமலில் இருப்பதால் பெரும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு அரசு நெறிமுறைகளை கடைபிடிக்கும் விதமாக இன்று பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.