செய்திகள்
கோப்புப்படம்

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா

Published On 2021-02-22 17:53 GMT   |   Update On 2021-02-22 17:53 GMT
நாமக்கல் மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
நாமக்கல்:

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 11,768 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,773 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 5 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 111 பேர் பலியாகி இருந்த நிலையில், மாவட்டத்தில் 11,622 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் 40 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News