செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 97.88 அடியாக உயர்ந்தது

Published On 2021-05-18 05:27 GMT   |   Update On 2021-05-18 05:27 GMT
சில நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நீர்மட்டம் உயர தொடங்கி இருப்பதை அறிந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று விநாடிக்கு 1994 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து டெல்டா மாவட்ட மக்களின் குடிநீருக்காக விநாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர் திறப்பை விட, தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் நேற்று 97.82 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 97.88 அடியாக உயர்ந்தது.

சில நாட்களாக அணையின் நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நீர்மட்டம் உயர தொடங்கி இருப்பதை அறிந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது அக்னி நட்சத்திரம் காலம் என்பதால் வெயில் தாக்கம் மேட்டூர் பகுதியில் அதிகமாகவே இருக்கிறது. வெயில் சுட்டெரிப்பதால் விவசாயிகள் வயலில் நீண்ட நேரம் வேலை பார்க்க முடியவில்லை. இருந்தாலும் விவசாயிகள் மாலை நேரத்தில் வெயில் தாக்கம் குறைந்ததும் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News