ஆட்டோமொபைல்
எலெக்ட்ரிக் வாகனம்

எலெக்ட்ரிக் கார்களுக்கு மேலும் ஓர் சலுகை - மத்திய அரசு அதிரடி

Published On 2021-08-06 11:33 GMT   |   Update On 2021-08-06 11:33 GMT
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு புது சலுகைகளை அறிவித்து வருகிறது.


இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 



புது அறிவிப்பின்படி பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு பதிவு சான்று பெறவும், புதுப்பிக்கவும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் இதை சார்ந்து இயங்கும் தொழிற்சாலைகளுக்கு இந்த அறிவிப்பு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இந்தியாவின் சில மாநிலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பதிவு கட்டணம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டது. தற்போதைய அறிவிப்பின்படி இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பதிவு கட்டணம் ரத்தாகி இருக்கிறது. இந்த அறிவிப்பு எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமைந்து இருக்கிறது.

Tags:    

Similar News