செய்திகள்
கோப்புப்படம்

சீர்காழியில் வருகிற 21-ந்தேதி அனைத்து ரெயில்களும் நின்று செல்ல கோரி கடையடைப்பு- ஆர்ப்பாட்டம்

Published On 2021-09-09 10:16 GMT   |   Update On 2021-09-09 10:16 GMT
சீர்காழியில் பலகாலமாக நின்று சென்ற பயணிகள் ரெயில்கள், கோவிட் 19 பிறகு நிற்காமல் செல்வதாக ரெயில் உபயோகிப்பாளர் சங்க சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
சீர்காழி:

சீர்காழி ரெயில் உபயோகிப்பாளர் சங்க சார்பில் கலந்தாய்வுக்கூட்டம் அதன் தலைவர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. நகர வர்த்தக சங்க துணை தலைவர் கோவி.நடராஜன், பகுதி செயலாளர் இந்திரஜித், வர்த்தக நல சங்க தலைவர் கோபு, சீர்காழி தாலுக்கா மொபைல் விற்பனையாளர்கள் சங்க தலைவர் மார்க்ஸ்பிரியன் செயலாளர் ஞானமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழுதுகள் இயக்கத் தலைவர் ‌ஷரவணன், நலம் அறக்கட்டளை செயலாளர் சுதாகர், ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு, சீர்காழியில் பலகாலமாக நின்று சென்ற பயணிகள் ரெயில்கள், கோவிட் 19 பிறகு நிற்காமல் செல்கிறது. இதனால் சீர்காழி வாழ் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என கருத்துக்களை கூறினர்.

இதனிடையே பலமுறை ரெயில்வே நிர்வாகத்திற்கு நேரிலும், கடிதம், மின்னஞ்சல் மூலம் தெரியபடுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதாலும், அனைத்து ரெயில்களும் சீர்காழியில் நின்று செல்ல மத்திய அரசை வலியுறுத்தி ரெயில்நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் அனைத்து வணிகர்களும் கடையடைப்பு செய்வது என ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. நிறைவில் செயலாளர் முஸ்தபா நன்றி கூறினார்.
Tags:    

Similar News