செய்திகள்
பலி

கடையநல்லூர் அருகே மினி லாரி மோதி வாலிபர் பலி

Published On 2021-07-19 13:06 GMT   |   Update On 2021-07-19 13:06 GMT
விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் மினி லாரியில் கடையநல்லூருக்கு ஆடு ஏற்றி வந்தார்.
அச்சன்புதூர்:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நாரணம்மாள்புரம் பஞ்சாயத்து கூடம்பட்டி கிராமத்தை சேர்ந்த திருமலைசாமி என்பவரின் மகன் சுரேஷ் (வயது 34). மஸ்கட் நாட்டில் வேலை பார்த்து வந்தார். இவர் 5 நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.இந்தநிலையில் நேற்று மாலை அவர் சொக்கம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு மோட்டார்சைக்கிளில் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கிலிபட்டி பஸ்நிறுத்தம் அருகே வடக்கு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் மினி லாரியில் கடையநல்லூருக்கு ஆடு ஏற்றி வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ் மீது மினி லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்ததும் சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி லாரி டிரைவர் முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். சுரேசுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News