ஆன்மிகம்
1,500 ஆண்டுகள் பழமையான விராலிமலை கோவில் கும்பாபிஷேகம்
1,500 ஆண்டுகள் பழமையான விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர்
புதுக்கோட்டை மாவட் டம் விராலிமலையில் மலை மேல் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலமாகும்.
மேலும் முருகன் அருண கிரிநாதருக்கு காட்சி தந்து அவருக்கு அஷ்டமா சித்தி வழங்கிய இடமாகவும் திகழ்ந்து வருகிறது. ஏராளமான சித்தர்களும் இங்கு வசித்துள்ளனர். வசிஷ்டரின் மனைவி அருந்ததி முருகனுக்கு பாலூட்ட மறுத்ததால் வசிஷ்டரால் சபிக்கப்பட்டார். இதனை கண்டு வருந்திய முருகப்பெருமான் வசிஷ்டரை சபித்தார்.
இந்த இருவரும் விராலிமலை முருகனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர். சூரபத்மனை பெற்றெடுத்த பாவம் நீங்கும் பொருட்டு காசியப்ப முனிவரும், தன தந்தையாகிய நான்முகனை தண்டித்த தற்காக சிவநிந்தனை செய்த பாவம் போக்க நாரத முனிவரும் இந்த முருகனை வழிபட்டு விமோசனம் பெற்றார்.
இந்த கோவிலில் காசியப்ப நாதர், வசிஷ்டர், அருந்ததி ஆகியோரின் உற்சவ மூர்த்திகள் உள்ளன. கடை சியாக இங்கு கடந்த 3.5.2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த திருப் பணிக்குழு மற்றும் கோவில் நிர்வாகம் முடிவு செய்து கடந்த 2018 ஆம் ஆண்டு பாலாலயம் நடத்தப்பட்டது.
இவ்வாறு பல்வேறு சிறப்புக்களை கொண்ட விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கியது.
கடந்த 22-ந்தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், விமான கலசங்கள் பிரதிஷ்டை, முதற்கால யாக பூஜையும், 23-ந்தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, மீன லக்னத் தில் முருகப் பெருமானுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.
நேற்று (24-ந்தேதி) அதிகாலை 4 மணிக்கு பரிவார யாகம், 4-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி கடம் புறப்பாடு, காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பரிவார மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு ஆச்சார்ய விசேஷ சந்தி, பாவனாபிஷேகம் நடந்தது. மாலை 5.30 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜைகள் நடந்தன.
இன்று (25-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி பின்னர் தொடர்ந்து நாடீ சந்தானம், ஸ்பர்சாஹூதி, 7.30 மணிக்கு பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கிரஹப்ரீதி, கடம் புறப்பாடும், காலை 8.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி விமான ராஜகோபுர கலச மகா கும்பாபிஷேகமும், காலை 9 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி மூலவர் மகா கும்பாபிஷேகமும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அப்போது கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு பின்னர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் முருகனை வழிபட்டனர்.
மேலும் முருகன் அருண கிரிநாதருக்கு காட்சி தந்து அவருக்கு அஷ்டமா சித்தி வழங்கிய இடமாகவும் திகழ்ந்து வருகிறது. ஏராளமான சித்தர்களும் இங்கு வசித்துள்ளனர். வசிஷ்டரின் மனைவி அருந்ததி முருகனுக்கு பாலூட்ட மறுத்ததால் வசிஷ்டரால் சபிக்கப்பட்டார். இதனை கண்டு வருந்திய முருகப்பெருமான் வசிஷ்டரை சபித்தார்.
இந்த இருவரும் விராலிமலை முருகனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர். சூரபத்மனை பெற்றெடுத்த பாவம் நீங்கும் பொருட்டு காசியப்ப முனிவரும், தன தந்தையாகிய நான்முகனை தண்டித்த தற்காக சிவநிந்தனை செய்த பாவம் போக்க நாரத முனிவரும் இந்த முருகனை வழிபட்டு விமோசனம் பெற்றார்.
இந்த கோவிலில் காசியப்ப நாதர், வசிஷ்டர், அருந்ததி ஆகியோரின் உற்சவ மூர்த்திகள் உள்ளன. கடை சியாக இங்கு கடந்த 3.5.2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த திருப் பணிக்குழு மற்றும் கோவில் நிர்வாகம் முடிவு செய்து கடந்த 2018 ஆம் ஆண்டு பாலாலயம் நடத்தப்பட்டது.
இவ்வாறு பல்வேறு சிறப்புக்களை கொண்ட விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கியது.
கடந்த 22-ந்தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், விமான கலசங்கள் பிரதிஷ்டை, முதற்கால யாக பூஜையும், 23-ந்தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, மீன லக்னத் தில் முருகப் பெருமானுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.
நேற்று (24-ந்தேதி) அதிகாலை 4 மணிக்கு பரிவார யாகம், 4-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி கடம் புறப்பாடு, காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பரிவார மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு ஆச்சார்ய விசேஷ சந்தி, பாவனாபிஷேகம் நடந்தது. மாலை 5.30 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜைகள் நடந்தன.
இன்று (25-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி பின்னர் தொடர்ந்து நாடீ சந்தானம், ஸ்பர்சாஹூதி, 7.30 மணிக்கு பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கிரஹப்ரீதி, கடம் புறப்பாடும், காலை 8.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி விமான ராஜகோபுர கலச மகா கும்பாபிஷேகமும், காலை 9 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி மூலவர் மகா கும்பாபிஷேகமும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அப்போது கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு பின்னர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் முருகனை வழிபட்டனர்.