ஆன்மிகம்
ராமர் பட்டாபிஷேக விழா

வால்மீகிபுரம் கோவிலில் ராமர் பட்டாபிஷேக விழா

Published On 2021-08-13 07:40 GMT   |   Update On 2021-08-13 07:40 GMT
சித்தூர் வால்மீகிபுரத்தில் உள்ள பட்டாபி ராமசாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் கோவில் உள்ளே பக்தர்களுக்கு அனுமதியின்றி அங்குரார்ப்பணம், சேனாதிபதி உற்சவம் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சித்தூர் மாவட்டம் வால்மீகிபுரத்தில் உள்ள பட்டாபி ராமசாமி கோவிலில் ராமர் பட்டாபிஷேக விழா 2 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் கோவில் உள்ளே பக்தர்களுக்கு அனுமதியின்றி அங்குரார்ப்பணம், சேனாதிபதி உற்சவம் நடக்கிறது.

நாளை (சனிக்கிழமை) காலை கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், யாக சாலையில் ஹோம பூஜை நடக்கிறது. மாலை ஊஞ்சல் சேவை, சீதா-ராமர் சன்னதியில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு அனுமந்த வாகனத்தில் உற்சவர் பட்டாபி ராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் உள்ளே உலா வருகிறார்.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், யாக சாலையில் ஹோம பூஜை, இரவு ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சி, ஊஞ்சல் சேவை, கருட சேவை ஆகியவை நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News